இணைய பதிவ கோடிகள் அனைவருக்கும் வணக்கம்.
நானும் கொஞ்சம் எழுதலாம் என்றிருகிறேன்.
முதலில் சிறிதளவு இனிப்பை சாப்பிடுங்க.
சுருக்கமான கவிதைகள்
கண்மூடி திறந்தேன் - கூசுகிறது
விடியற்காலை
பழகி வேலை செய்யும் நான்கு விலங்குகள்
மனிதன் மாடு நாய் யானை
மற்றவைகளை பற்றி தெரியாது
தீர விசாரித்தாலும் பொய்
நம்ப மறுக்கும் உண்மைகள்
கண்ணாடி என்னை கோபமாக பார்க்கிறது
இன்பக் கனவில் தட்டி எழுப்பி விட்டு விட்டான்
என் அறை தோழன்
கோழிக்கு இரண்டு கால்கள் என்பதும்
அதில் ஒன்றுகூட என் பொட்டலத்தில் இல்லை என்பதும்
தெருமுனை உணவகத்தில் நான் பெற்ற உண்மைகள்
கடவுளே கடமையை செய்ய மறுக்கும் போது
காவிரி ஆணயத்தை குறை சொல்லாதீர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சதுர அடி உரூபாய் மூவாயிரத்து நானூறூ மட்டும்
சென்னைக்கு மிக அருகாமையில்
தீபாவளியின் வளர்ச்சியில் பேயாரின்
மாமனாருக்கும் பங்கு உண்டு
உருவாக்கினேன். உருவாக்குவேன். நன்றி.